தேசிய கபடி நெல்லியடி மத்திய கல்லூரி வெள்ளிப் பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கபடிப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டி கேகாலை பாலிகா வித்தியாலய உள்ளரங்க விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அநுராதபுர மக்குவா மகா வித்தியாலய அணி மோதியது. இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்திய போதிலும் இறுதியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். 2022 இதுவரை நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த ஆண்கள் பிரிவில் பதக்கத்தை சுவீகரித்தது நெல்லியடி மத்திய கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.