தனியார் கல்வி நிறுவனங்கள் 25 முதல் ஆரம்பம்
தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்காமையால் மாணவர்கள் பலரும் பல சிக்கல்களை எதிர் கொள்வதாக இன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக் காட்டினார். இதற்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 11 ம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா தொற்றால் மாணவர்கள் கல்வியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். இதனால் எதிர்வரும் 25ம் திகதியிலிருந்து தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.