தனிமைப்படுத்தல் ஊரடங்கு 30ம் திகதியுடன் நீக்கப்படலாம்
தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் என தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைக்க முடியாதுள்ளது. எனவே பொது மக்கள் சுய தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.