Mon. Apr 29th, 2024

சுழிபுரத்தில் தண்ணீர் வாழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் வாழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுழிபுரம் பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் 10 மாதங்களுமான யசோதரன் யஸ்மிதா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள தமது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை முற்றத்தில் 20 லீற்ரர் வாழிக்குள் நீர் நிரப்பப்பட்டிருந்தது. அதற்குள் விழுந்த கரண்டியை எடுக்க முற்பட்ட போது வாழிக்குள் விழுந்துள்ளார். சம்பவத்தை கண்ட வீட்டுக்காரர் உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்