பயிற்றுவிப்பாளரின் கணவர் விபத்தில் பலி
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியா வீரபுரம் மணிவாசகர் வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரின் கணவரான காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் வயது33 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அவர் சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 3 வயது மற்றும் ஒன்றரை வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடருந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற கடவையினூடாக மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பாதுகாப்பற்ற கடவையில் பொலீஸார் கடமையில் ஈடுபடுகின்ற போதிலும் சிறிது நாட்களாக பொலீஸார் கடமையில் ஈடுபடுவதில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.