Thu. May 2nd, 2024

சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி திருடியவர்கள் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட  சிறிய பொருட்களை களவாடிய இருவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

துன்னாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதிற்கு குறைந்த இருவரையே பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இதில் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயலில் ஈடுபட்டமையால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தப்பித்து வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கோழி, தண்ணீர் பைப், தொலைபேசி என வீடுகளில் கண்ணில் தெரியும் பொருட்களை களவாடிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்