சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் கோவிலாகண்டி பகுதியில் 44 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கும் என 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.