சிறுநீரக பாதிப்பால் ஹாட்லிக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11 ம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் சுகயீனம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கல்வியில் சிறந்து விளங்கியதுடன், க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெறக் கூடியவர் என கல்லூரி ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
கரணவாய் மண்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் வயது 16 என்ற மாணவன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு சிறுநீராகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.