சற்றுமுன் நுணாவிலில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் படு காயம்
சற்றுமுன் நுணாவிலில் நடைபெற்ற விபத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸும் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கயஸ் வாகன சாரதி ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.