Sat. May 18th, 2024

கிளிநொச்சி பொறியியல் பீடத்திற்கு வருகை தந்த மாணவருக்கு கொரோனா

கிளிநொச்சி பொறியியல் பீடத்திற்கு வருகை பொறியியல் பீட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.  இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 453 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு உட்பட்ட பொறியியல் பீடம், கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி பொறியியல் பீடத்திற்கு  வருகை தந்த 124 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்