சம்பா மற்றும் நாட்டு அரிசிகளை கூடிய விலைக்கு விற்ற 350 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது
சம்பா மற்றும் நாட்டு அரிசிகளை கூடிய விலைக்கு விற்ற 350 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கடந்த மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
அதிகபட்சமாக ரூ .98 சில்லறை விலை என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்ட 20 ஆம் தேதிக்கு பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .
இவர்கள் இந்த அரிசிகளை அதிகபடசமாக 125 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது