Fri. Apr 26th, 2024

கோலூன்றி பாய்தல் வட சிங்கப் பெண்கள் மீ்ண்டும் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தையும்,  அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த சி.சுவர்ணா 3.20 மீற்ரர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,
அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிரூஷியா 3.20 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
எஸ்.டிலக்சிகா 2.90 மீற்ரர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்