Thu. May 2nd, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் அரையிறுதிக்கு தகுதி

ஆர்த்திகனின் அதிரடியான கோல்களினால் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகம் தமது வைர விழாவினை முன்னிட்டு நடாத்தும் மாகாண ரீதியிலான உதைபந்தாட்ட தொடர் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்றைய லீக் ஆட்டத்தில் றேஞ்சஸ் எதிர் பொமர்ஸ் அணிகள் மோதியது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 07 வது நிமிடத்தில்ஆர்த்திகன் தனது அணிக்கான 1வது கோலை போட்டு முன்னிலைப்படுத்தினார்.கோல் பெற்றதும் இரு அணிகளின் ஆட்டத்தில் புதிய உத்வேகம் காணப்பட்டது. இரு அணிகளும் கோல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் கோல் பெறும் வாய்ப்புக்கள் தவிடுபொடியாக்கப்பட்டன. முதல்பாதியாட்டம் 1:0 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது . இரண்டாம் பாதியாட்ட ஆரம்பத்தில் இரு அணிகளும் கோல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்  இதன் பயனாக ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பொமேர்ஸ் அணியின் விஸ்ணுயனால் தனது அணிக்கான முதலாவது கோல் பெறப்பட்டு சமநிலையானது ஆட்டம். அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் கோல் பெறுவதற்கான வாய்ப்பினை மேற்கொண்டது . தொடர்ந்த ஆட்டத்தில் மீண்டும் ஆர்த்திகனால் 35வது நிமிடத்தில் தனது அணிக்கான 2வது கோல் பெறப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் மதுசாந் அவர்களால் தனது அணிக்கான 3வது கோல் பெறப்பட்டது. மேலும் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் ஆர்த்திகன் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்