Fri. May 17th, 2024

ரயில்- கார் விபத்து இருவர் பலி

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் பாதுகற்பற்ற கடவையினூடாக கடக்க முற்பட்ட காருடன் ரயில் மோதுண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை அரியாலை மாம்பழச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் பாதுகாப்பற்ற கடவை இல்லாத போதிலும் வழமையாக சமிச்ஞை ஒலி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் குறித்த விபத்து நடைபெற்ற நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை ஒலி எழுப்பப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ரயில் வருவதை அவதானிக்காமல் காரில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்