Thu. May 2nd, 2024

கொற்றாவத்தை சிவானந்தா அரையிறுதிக்கு முன்னேற்றம்

செல்லத்துரை- அன்னப்பச்சி உறவுகள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகம் அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் கொற்றாவத்தை சிவானந்தா அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் கொற்றாவத்தை சிவானந்தா அணி வீரர்கள் சாதுரியன்,  சரண் ஆகியோர் அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அசத்தினர்.  இருப்பினும் பலாலி விண்மீன் அணி வீரர் ஒரு கோலைப் போட இடைவேளைக்கு முன்னர் சிவானந்தா அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் சிவானந்தா அணி வீரர் சரண் ஒரு கோலைப் போட பலாலி விண்மீன் அணி வீரர் ஒரு கோலைப் போட்டு அசத்த ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது.  இருப்பினும் மேலதிக கோல்கள் பதிவு செய்ய முடியாது போக கொற்றாவத்தை சிவானந்தா அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்