கொரோனாவால் யாழில் பெண் மரணம்
கொரோனா பாதிப்பால் வயதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இன்று யாழ் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொலம்பகம் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மூவரும், கோப்பாய் வைத்தியசாலையில் மூவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவரும், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவரும், கோப்பாய் சுகாதார பிரிவில் 31 பேரும், உடுவில் சுகாதார பிரிவில் 5 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் நால்வரும், யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் ஒருவரும், சங்கானை சுகாதார பிரிவில் ஒருவரும், யாழ் சிறைச்சாலையில் நால்வரும் என 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.