Fri. Apr 26th, 2024

கே.சி.சி.சி கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நாளை

கே.சி.சி.சி.விளையாட்டு கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது.

இதன் இறுதியாட்டத்தில் ஜொனியன்ஸ் விளையாட்டு கழக அணியை எதிர்த்து ஏபி விளையாட்டு கழக அணி மோதவுள்ளது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரி ஐக்கிய அமெரிக்கா கிளையின் செயலாளரும், பொறியியலாளருமான நாகராஜா பிரபாகரன், சிறப்பு விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் எம்.ஞானசம்பந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்