Thu. May 2nd, 2024

கிராம சேவகரும் மனைவியும் எவ்வாறு இறந்தனர் பொலீஸார் தீவிர விசாரணை

முழங்காவில் கிராம சேவகரும் அவரது மனைவியும் எவ்வாறு இறந்தனர் என கிளிநொச்சி பொலீஸாரால் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட முழங்காவில் கிராம சேவகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது 50), ந.சுமித்தா (வயது 46) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு முழங்காவில் பல்லவராயன்கட்டுச் சந்திக்கு அருகாமையில் உள்ள கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இறந்தது யானை தாக்கியா? அல்லது டிப்பர் வாகனம் மோதியா? எனப் பொலீஸாரால் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீதியில் குறுக்காக மரம் வீழ்ந்ததில் அதனை விலத்தி பயணித்த போது டிப்பர் வாகனம் மோதியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலவேளை யானை தாக்கியும் இறந்திருக்கலாம் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்