கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொரோனா சிறைக் கைதி தப்பியோட்டம்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்தமையால் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இயக்கச்சி கோரோனோ தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.