பல்கலைக்கழக உடற்கல்வி மாணவர்கள் விண்ணப்பம் அனுப்புவதில் சிரமம்
உடற்கல்வி பாட நெறிக்கான விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பல்கலைக் கழகங்களில் 13 கற்கை நெறிகளுக்கு பொதுஅறிவு, பொதுஉளச்சார்வு பரீட்சை நடாத்தியே கற்கை நெறிகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அதில் சில பல்கலைகழகங்கள் 06ம் திகதியும் சில பல்கலைகழகம் 10ம் திகதியும் இறுதி விண்ணப்ப திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடேமுடக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மக்கள் வங்கியிலும் இலங்கை வங்கியிலும் மிகவும் கஷ்ரப்பட்டு சமூக இடைவெளியை பேணி வரிசையில் நின்ற போதும் பணம் கட்டமுடியாத நிலை ஏற்பட்டதுள்ளதுடன் சில மாவட்டங்களில் வெளியேற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் சில மாவட்டங்களில் வங்கிக்கு தூரஇடம் செல்ல வேண்டியும் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பரீட்சைக்கு பணம் செலுத்தி விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மாற்று நடவடிக்கை எடுத்து மாணவர்கள் உளம் பாதிக்காது விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.