Sun. May 5th, 2024

காங்கேசன்துறை கடலில் குளிக்க சென்ற இருவர் மாயம்

காங்கேசன்துறையில் உள்ள தல்செவன இராணுவ சுற்றலா விடுதிக்கு அருகில் கடலில் குளிக்க சென்றிருந்த இருவர் கடலில் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில்இடம்பற்றுள்ளதாக தெரியவருகிறது . இதில் தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர்கள் இருவரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். இந்நிலையில் இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக காங்கேசன்துறை தெரிவித்ததுடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்