Sat. May 18th, 2024

அல்லைப்பிட்டி இளைஞருக்கு கொரோனா அறிகுறி

அல்லைப்பிட்டி இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் யாழ் போதனா வைத்தியசாலையில் கொவிட் 19 சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கே அறிகுறிகள் தென்பட்டதாக தெரியவந்துள்ளது. நேற்று சனிக்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கில் குறித்த இளைஞர் பேரூந்தில் பயணம் செய்துள்ளார். கொழும்பில் இருந்து வரும் போதே உடல் நிலை சரியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு சென்று மகனை அழைத்துக் கொண்டு அல்லைப்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவரை யாழ் போதனா வைத்தியசாலையின் கொரோனா தொற்று பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாயார் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்