கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் முதல்வர் தி.அரவிந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சமாதான நீதவானும் மல்லாகம் நீதிமன்ற பதிவாளருமான ஞா.அன்ரன் ஜேசுதாஸ், அவர்களும், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அந்தோனி பெர்னான்டோ பெனட் அடிகளார், வடமராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.பாக்கியநாதன், கெளரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை சிரேஷ்ட ஆசிரியர்களான திருமதி. ப.சந்திரகுமார், திருமதி, சா.வாகீசன், திருமதி.இ.ஜெயராம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.