Sat. May 4th, 2024

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் உதைபந்தாட்ட தொடரில் கீரிமலை சிவானந்தா மற்றும் நாவாந்துறை சென்மேரிஸ் அணிகள் அரையிறுதிக்குள் முன்னேற்றம்

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் உதைபந்தாட்ட தொடரில் கீரிமலை சிவானந்தா மற்றும் நாவாந்துறை சென்மேரிஸ் அணிகள் காலிறுதியாட்டங்களில் வெற்றி பெற்ற் அரையிறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம், வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கீரிமலை சிவானந்தா அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.  இரு அணிகளும் சமபலத்துடன் மோதி 3:3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கீரிமலை சிவானந்தா அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குள் நுழைந்தனர்.
அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து தேவரையாளி யங்லயன்ஸ் அணி மோதியது. ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நாவாந்துறை சென்மேரிஸ் அணி 7:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்