கரவெட்டி – ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பின் முன்மாதிரியான செயற்பாடு
கரவெட்டி – ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பின் “தூய கிராமம் – கரவெட்டி” எனும் கருத்திட்டத்தில் கிராமிய குளங்களை தூர்வாரும் செயல் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்த கரவெட்டி வைர வெல்லவன் தூர்வாரப்பட்டு நேற்று (31.12.2022) மக்கள் பாவனைக்காக கையளிக்கபட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வைத்தியர் ம.வாசுதேவன், ‘NBCM Foundation’ முதல்வர் சி. தயாபரன் சிறப்பு விருந்தினர்களாக திரு. க.உமாசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த ரம்மியமான சூழலில் ஓய்வெடுக்க கூடிய பொழுதுபோக்கு வசதிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.