Wed. May 15th, 2024

வடமராட்சியில் பல இடங்களில் நாளை மின்வெட்டு

நாளை வடமராட்சி பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 2023-01-02 திங்கள் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் ஐஸ் தொழிற்சாலை பொலிகண்டி, மனோகாரா அல்வாய், நெடியகாடு, பொலிகண்டி சித்திவிநாயகர் பாடசாலை – திக்கம், தேவரையாளி – வதிரி, திக்கம் – நெல்லியடி வீதி, வதிரி – அரசடி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் கிராஞ்சி,சிவபுரம், பாலாவி, பொன்னாவெளி, வலைப்பாடு, வேராவில் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் ஆசிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். இதேநேரம் நாளை வடமராட்சி பகுதியில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
இதன்படி பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணி வரைக்கும், இரவு 8.40 மணி தொடக்கம் 10 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்