Fri. Apr 26th, 2024

பிக்குவால் சிறுமி துஸ்பிரயோகம், பாட்டியே உடந்தையான துரோகம்

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த இந்த சிறுமி பாடசாலை விடுமுறையில் தொம்பகஹாவெல பிரதேசத்தில் உள்ள தனது அத்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 14 வயதான பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,சம்பவம் தொடர்பாக மொனராகலை தொம்பகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

பாட்டி மற்றும் அத்தையுடன் விகாரைக்கு சென்ற போது, இவர்கள் இருவரின உதவியுடன் சம்பந்தப்பட்ட பிக்கு விகாரைக்குள் வைத்தே சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன் பிக்குவின் சகோதரர் ஒருவர் சிறுமியின் அத்தையின் வீட்டுக்கு சென்று சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தொம்பகஹாவெல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பௌத்த பிக்கு, அவரது சகோதரர், குற்றத்திற்கு உதவிய சிறுமியின் அத்தை மற்றும் பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்