கரணவாய் மகா வித்தியாலயத்தில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
கரணவாய் மகா வித்தியாலயத்தில் தற்போது வெளியான க.பொ.த.சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று கரணவாய் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கரணவாய் மகா வித்தியாலய வெளிநாடு வாழ் பழைய மாணவர்களின் அனுசரணையில் வித்தியாலய முதல்வர் சிவகணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சமாதான நீதவானும், கரணவாய் மகா வித்யியாலய பழையமாணவருமான சற்குணம் அவர்கள் விருந்தினராக கலந்து துவிச்சக்கர வண்டிகளை வழங்கிக் கெளரவித்தார்.