பிற்போடப்பட்ட பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வடமாகாண கல்வித் திணைக்களத்தால் பிற்போடப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி தொடர்பாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் க.ஜெ.பிரட்லி அறிவித்துள்ளார்.
கடந்த 9ம் திகதி பிற்போடப்பட்ட பரீட்சைகளில் தரம் 6 முதல் 9 வரை எதிர்வரும் 19ம் திகதி காலை 8 மணி முதல் 10 மணிவரை ஆங்கில பாடமும், எதிர்வரும் 22ம் திகதி தரம் 10ற்கு காலை 8 மணி முதல் 11.10 வரைக்கும், தொகுதி 111 ற்குரிய பாடமும் அன்றைய தினம் தரம் 11ற்கு காலை 8 மணி முதல் 11.10 வரைக்கும், தொகுதி 1ற்குரிய பாடமும், நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.