Mon. Apr 29th, 2024

கரணவாயில் பசுமாடு ஏல விற்பனை

கட்டாக்காலி மாடு ஏல விற்பனை எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரணவாய் மேற்கு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கரணவாய் மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட “தேனி ” என்ற தோட்டத்தில் கட்டாக்காலியாக நின்று பயிரழிவை ஏற்படுத்திய சிவப்புநிற பசுமாடு ஒன்று பிடிக்கப்பட்டு எவரும் உரிமை கோரப்படாததையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை ஏலத்தில் விடப்பட்டள்ளது.
ஏலத்தில் வெற்றிபெறும் கோரிக்கையாளர் உடன் பணம் செலுத்தி ஏலம் நடைபெற்ற இடத்திலிருந்து மாட்டினை அப்புறப்படுத்த வேண்டுமென கரவெட்டி கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்