Mon. Apr 29th, 2024

கண்பரிசோதனை முகாம் இறுதிச் சந்தர்ப்பம்

 “இலவச கண்புரை (ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை”
யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தென்மராட்சி மற்றும் சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நோயாளர்களுக்கான இறுதிப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தென்மராட்சிப் பகுதிக்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இறுதிக் கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன்,
சங்கானைப் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இறுதிக் கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொல்புரம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திலும் காலை 11.00 மணிக்கு வட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திலும், நடைபெறவுள்ளது.
எனவே இதுவரை பதிவுசெய்ய தவறிய கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண்பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்