Sat. May 4th, 2024

அருணோதயாவின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

வடமராட்சி கிழக்கு அருணோதயா விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமாகாண அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்ஹென்றிஸ் அணி மோதவுள்ளது.
அருணோதயா விளையாட்டுக் கழக தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சி.சபாஆனந் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பா.முகுந்தன்,  சக்கோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலய ஆசிரியர் அல்லாத.அரியரஞ்சன்,  வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் சி.சிவநேசன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.அமரசிங்க,  வடமாட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் பொருளாளர் த.தங்கரதீஸ்வரன், ஆழியவளை பொருளாதார உத்தியோகத்தர் க.கஜரூபன்,  ஆழியவளை சமுர்த்தி உத்தியோகத்தர் கி.ராஜ்கிரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்