அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் பலி
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை பகுதியைச் சேர்ந்த குணசெல்வம் நிரோஜன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் வரணி அம்மா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றில் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இளைஞனின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.