கரவெட்டி பேடகம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையானது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பிரதேச ஆவண மலர் ஒன்றை “பேடகம்” என்ற பெயரில் வெளியிட உள்ளதாக கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மலருக்கான ஆக்கங்களை பிரதேச அறிஞர்களிடம் இருந்தும், கலைஞர்களிடம் இருந்தும் கரவெட்டி பிரதேச சபை எதிர்பார்த்து நிற்கின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தினை சமூக, பொருளாதார, அரசியல், கலை, இலக்கியம் ரீதியாக முன்னேற்றுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் இம்மலரினது ஆசிரியர்குழு முயற்சித்து நிற்கின்றது. இப்பிரதேசத்தின் தொழில்களை இன்னும் விருத்தி செய்வதற்கும் செய்வதற்கும் மக்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் முன்மொழிவுகள் உள்ளடங்கிய ஆய்வுக் கட்டுரைகளை கள ஆய்வுகளுக்கு ஊடாக வெளியிட வேண்டும் என இச்சபை விரும்புகின்றது. ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்கள் தமது ஆய்வுக்கட்டுரைகளை 25.06.2023ம் திகதிக்கு முன்னர் அனுப்பி உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.