கட்டைக்காடு பகுதி விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சையிக்கிள் விபத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கேவில் முள்ளியாறு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மாதுரன் ( வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று குறித்த நபர் மேட்டார் சையிக்கிளில் சென்ற போது ஸ்ராண் தட்டாமல் சென்றதில் இராணுவ காவலரணுக்கு முன்பாக உள்ள பாலத்துடன் விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது. குறித்த நபரை இராணுவத்தினர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொண்டார்.