Fri. Mar 29th, 2024

மண்ணெண்ணை விற்றவர் மற்றும் வாங்கியவர் கைது

வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணெண்ணையை அதிக விலைக்கு விற்றவரும், வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்தறை 2ம் குறுக்குத் தெரு பகுதியில் மண்ணெண்ணை அதிக விலைக்கு விற்பதாக புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது 380 லீற்றர் மண்ணெண்ணையை லீற்றர் 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனையில் ஈடுபட்டவரையும் அதனை வாங்கியவரையும் பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்