Sun. May 5th, 2024

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் அமைதியான முறையில் நிறைவு , 70% வாக்குப்பதிவு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் வாக்களிப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றது. சுமார் 70% க்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்துள்ளார்கள். வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சியாளர் தெரிவித்தார் . இன்று காலை 7 மணிக்கு 17 தொகுதிகளில் 47 வாக்குச்சாவடிகளில் ஆரம்பமான இந்த வாக்குப்பதிவுகள் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றுள்ளது .எல்பிட்டி பிரேதேச சபைத் தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். எல்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவாக்கவுள்ள மொத்தம் 28 உறுப்பினர்களில் 17 பேர் தொகுதிவாரியாகவும், 11 பேர் விகிதாசர முறையிலும் தெரிவு செய்யப்படுவார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்