Fri. Apr 26th, 2024

காலிறுதிக்கு முன்னேறியது சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி காலிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் குருநாகலில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான  ஆட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து அநுராதபுர நிவேதக் சித்திய மத்திய மகா வித்தியாலய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 20:5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று காலிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள காலிறுதியாட்டத்தில் களுத்துறை பாலிக வித்தியாலய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்