உதைபந்தாட்ட அக்கடமிகள் சம்மேளனம் அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ்ப்பாண உதைபந்தாட்ட அக்கடமிகள் சம்மேளனம் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வாராம் உரும்பிராய் திருக்குமரன் சனசமுக நிலையத்தில் இடம்பெற்றது.
இன்றைய காலகட்டத்திற்கு அக்கடமிகளின் தோற்றப்பாடு மிகமுக்கியமான ஒன்றாக உள்ளதால் அக்கடமிகளை ஒன்றிணைத்து சம்மேளனமாக உருவாக்கி சிறப்பான முறையில் கொண்டு நடாத்த வேண்டும் என பல அக்கடமிகளின் முகாமையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கமைவாக இவ் சம்மேளனம் அங்குரார்பணம் செய்யப்பட்டது.
இதன் தலைவரா
கு.பகீரதன் (உரும்பிராய் அக்கடமி)
செயலாளராக கே.சுரேந்திரன்( சென்றலைட்ஸ் அக்கடமி)
பொருளாளராக எம்.டனிஸ்ரன்( யாழ்.உதைபந்தாட்ட அக்கடமி )
உப தலைவராக ஆர்.காண்டீபன்( மல்லாகம் சிறி முருகன் அக்கடமி)
உப செயலாளராக எஸ்.சாந்தகுமார் ( கிறாஸ்கொப்பர்ஸ் அக்கடமி)
நிர்வாக உறுப்பினர்களாக
கே.பிரசன்னா ( உரும்பிராய் அக்கடமி) என்.றமேஸ் ( மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி)
கே.சுகந்தன் ( இணுவில் கலாஜோதி அக்கடமி) கே.சுபராஜ் ( வேலணை ஐயனார் அக்கடமி) போசகர்களாக
வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்க தலைவர் ப.தர்மகுமாரன், பாசையூர் சென்.அன்ரனிஸ் எஸ்.கிளிபேட் அன்ரனிப்பிள்ளை ஆகியோருும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதுவரை பதிவு செய்யாத அக்கடமிகள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.