Mon. Apr 29th, 2024

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வசமானது.

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வசமானது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி போன்றவற்றில் அதிபராக கடமையாற்றிய ரட்ணசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக கடந்த ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரி அணிக்கும் நெல்லியடி மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான கல்லூரிகளின் சமர் என வர்ணிக்கப்படும் 20 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி இன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெறாமல் முதல் பாதியாட்டம் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளின் ஆட்டம் அனல் பறக்கும் வேகத்தில் இருந்தன. இருப்பினும் ஆட்டத்தின் பல நிமிடங்கள் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வசம் இருந்தது. நெல்லியடி மத்திய கல்லூரி அணி முன்கள வீரர்கள் ஆட்ட வியூகங்களை மாற்றியமைத்து கோல் பெற முயற்சித்த அனைத்து முயற்சிகளையும் ஹாட்லிக் கல்லூரி கோல் காப்பாளர் ஆர்நிகன் மிகச் சிறப்பாக தடுத்து ரசிகர்களின் கரவோசத்தை பெற்றார். இதனால் இரண்டாவது பாதியாட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இருப்பினும் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவடைய சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். ஆட்ட நாயகனாக ஹாட்லிக் கல்லூரி அணி வீரர் என்.பவநீதன், சிறந்த கோல் காப்பாளராக ஹாட்லிக் கல்லூரி அணி வீரர் எஸ்.ஆர்நிகன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்