Sun. Apr 28th, 2024

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்களுக்கு கெளரவம்

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர்.

வடமராட்சியில் கல்வி மற்றும் இணைபாட விதானத்தில் மிளிரும் கல்லூரிகளின் அதிபர்களான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் கே.கிருஸ்ணகுமார் ஆகியோர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி சமூகத்தால் கெளரவிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி போன்றவற்றில் அதிபராக கடமையாற்றிய ரட்ணசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கல்லூரிகளின் சமர் இன்று ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விலேயே இவ்விரு அதிபர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்