Sat. Apr 27th, 2024

பரபரப்பான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணி சம்பியன்

ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றிய ரட்ணசபாபதி அதிபரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது ஆண்டாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் அணிக்கும் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணிக்கும் இடையிலான கால்பந்தாட்ட போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடினர்.ஆனால் ஹாட்லிக் கல்லூரி அணியினருக்கு கோல் பெறும் வாய்ப்புகள் பல நழுவ விட்டனர். இதில் நெல்லியடி மத்திய கல்லூரியின் பின்கள வீரர் தணிகைவேள் மற்றும் ஹாட்லிக் கல்லூரியின் பின்கள வீரர் ஜெயகரன் ஆகியோரின் தடுப்பாட்டங்களை மீறி கோல் பெறுவதில் இரு அணிகளும் சிரமப்பட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் நிறைவடைய சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்