இன்று 20 பேருக்கு தொற்று
யாழ் மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், காரைநகர் வைத்தியசாலையில் நால்வருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நால்வருக்கும் என யாழ் மாவட்டத்தில் 18 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.