இன்று முதல் இரு கட்டங்களாக பயணக் கட்டுப்பாடு
நாடு முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை இரு கட்டங்களாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி காலை 4 மணி வரைக்கும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்து பின்னர் தளர்த்தப்பட்டு 25ம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலிற்கு வந்து தளர்த்தப்படுவது தொடர்பாக எதிர்வரும் 28ம் திகதி தீர்மானிக்கப்பட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.