Tue. Apr 30th, 2024

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த இருவருக்கு தொற்று

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

47 வயது மற்றும் 100 வயதுடையவர்களுக்கே கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
வல்வெட்டித்துறை துறையைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று பிசிஆர் எடுபப்பதற்கு சுகாதார துறையினரால் நாள் குறிக்கப்பட்டது. இந்நிலையில் நோய் தீவிரம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். அவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இன்பருட்டி பகுதியைச் சேர்ந்த 100 வயதுடைய ஒருவர் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கான பரிசோதனையில கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்