Tue. Apr 30th, 2024

ஆதிகோயிலடி, பருத்தித்துறை சில பகுதிகள் முடக்கும் நிலை

வடமராட்சி பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் பருத்தித்துறை 401 கிராம அலுவலகர் பிரிவில் மேலும் சில பகுதிகளை மூடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று வடமராட்சி பகுதியில் 48 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து நேற்று 401 கிராம அலுவலகர் பிரிவில் 156 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மேலும் சில பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியில் அண்மையில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியையும் முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியில் இன்றும் 209 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்