Mon. Apr 29th, 2024

ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதி கொரோனா சிகிச்சை நிலையம்

யாழ் மாவட்ட த்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியினை கோவிட் 19 தொற்று நோயாளர்களுக்குரிய சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் அவர்களுக்கான சிகிச்சை வழங்கும் நிலையங்கள் போதாமலுள்ளமையால் ஆதார வைத்தியசாலைகளில் ஒரு பகுதியை இதற்கான சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி யாழ் மாவட்டத்தில் இயங்கும் ஆதார வைத்தியசாலைகளான பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை,
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை,  போன்ற ஆதார வைத்தியசாலைகளில் ஒரு விடுதியினை கோவிட் 19 நோயாளர் சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்