Sun. Apr 28th, 2024

ஆண்களுக்கான எல்லே சாதித்தது சென்தோமஸ் அணி

சிறப்பான களத்தடுப்பால் எல்லே கிண்ணம் பருத்தித்துறை சென்தோமஸ் அணி வசமாகியது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியின் இறுதியாட்டம் இன்று  திங்கட்கிழமை அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதியது.
40 பந்துகள் கொண்ட ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை சென்தோமஸ் அணி 2 ஓட்டங்களை பெற்றனர். அவ்வணி சார்பில் அன்ரன், அருண் ஆகியோர் பெற்றுக் கொடுத்தனர்.
3 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனக் களம் இறங்கிய பருத்தித்துறை ஐக்கிய அணியின் பருத்தித்துறை சென்தோமஸ் அணியினரின் களத்தடுப்பை மீறி ஓட்டங்களைப் பெறுவதில் சிரமப்பட்டனர். இதனால் 40 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று தோல்வியடைய பருத்தித்துறை சென்தோமஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்