Sun. May 5th, 2024

ஆட்டோ – சைக்கில் மோதி விபத்து!! -ஒருவர் பரிதாப பலி-

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி சாம்பல்தீவு பகுதியில் முற்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த துவிச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சல்லி – சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த துவிச்சக்கரவண்டி சாரதியான விஜயானந்தன் ஜெசூதன் (26வயது) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

இதேவேளை முச்சக்கர வண்டி சாரதியான அதே இடத்தைச் சேர்ந்த சித்திரவேல் கேதீஸன் (25வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை – சாம்பல் தீவு பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்