Thu. Apr 25th, 2024

கொழும்பில் உதயமாக இருக்கும் புதிய கூட்டணி!! -இரகசி பேச்சுக்கள் மும்முரம்-

நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதான கட்சிகளுடன் கூட்டு சேராத மிதவாத கொள்கைகளையுடைய சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரை குறித்த கூட்டணிக்குள் உள்வாங்குவது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி உருவாகும் புதிய கூட்டணியில் இணைத்து, பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன், ஜனாதிபதி சட்டத்தரணி, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மைத்ரி குணரத்ன, சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் தம்ம திசாநாயக்க மற்றும் வட.மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரே இவ்விடயம் தொடர்பாக இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தேவையின் நிமித்ததே இந்த புதிய கூட்டணிக்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்